×
 

தமிழ்நாடு எல்லாமே கொடுக்கும்... வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!

தமிழ்நாடு எல்லாமே கொடுக்கும் என நடிகை தேவயானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பெயரிடப்பட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் சமூக நலத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல் நிகழும் நிகழ்வாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' விழா, இன்று சென்னையின் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழா, தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் வெற்றிகளை கொண்டாடும் ஒரு பிரமாண்டமான சிறப்பு நிகழ்ச்சியாக அமையும்.

இது வெறும் தொடக்க விழா மட்டுமல்ல. பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றங்களை, அவர்களின் சொந்த வார்த்தைகளில் உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தளமாகவும் உருவெடுக்கிறது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்... பாஜக எம். பி. பேச்சால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை..!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தேவயானி தமிழ்நாடு குறித்து பெருமையுடன் பேசினார். தமிழ்நாடு வாழவைக்கும் பூமி என்றும் இங்கு யார் வந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றையும் கொடுக்கும் எனவும் தெரிவித்தார். நான் பிறந்து வளர்ந்தது மும்பையாக இருந்தாலும் எனக்கு எல்லாமே கிடைத்தது தமிழ்நாட்டில்தான் எனவும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share