உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு அதிமுக சார்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயல் என்றும் இது ஒரு பரந்த போரை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது எனவும் இஸ்ரேல்- ஈரான் மோதல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருந்தார். காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் பாலஸ்தீன குடிமக்களின் துன்பங்களுடன் இணைந்து, இந்த வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
எனவே, உலகம் கட்டுப்பாடு, நீதி மற்றும் அர்த்தமுள்ள ராஜதந்திரத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த நிலையில், முதலமைச்சரின் கருத்துக்கு அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்லாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என கூறியுள்ளது.
இதையும் படிங்க: சேதாரம் உங்களுக்கு தான்.. கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியாதீங்க.. அமித்ஷாவுக்கு முதல்வர் பதிலடி!
உள்ளூர் வி. சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுடையே பாதுகாப்பையே உறுதிசெய்ய முடியாத உங்களுக்கு, உலகப் போர், சர்வதேசப் பாதுகாப்பு பற்றியெல்லாம் Commentary ஒரு கேடா என்றும் சரமாரியாக சாடியுள்ளது. உங்களை மக்களை ஏமாற்ற முடியாது என்றும் #nomorewar கிடையாது., #nomorestalin என்று தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: அசால்ட் அக்யூஸ்ட்.. கேட்கப் போனா அரெஸ்ட்! இவங்கள நம்புனா அவ்வளவுதான்.. ஆவேசமான இபிஎஸ்!