×
 

விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

நான் இதுவரை இரண்டு முறை வந்துள்ளேன். காரணம், அவர் தற்போது பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 2 முறை டெல்லி சென்றுள்ள நிலையில், 3வது முறையாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு குறித்து சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் நான்கு நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் தெளிவாக தெரியவரும். யார் புதியதாக கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதையும் அப்போது அறிந்துகொள்ளலாம். நான் இதுவரை இரண்டு முறை வந்துள்ளேன். காரணம், அவர் தற்போது பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், நான் வந்து சந்தித்து செல்கிறேன். தேர்தல் முடியும் வரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது என்பதால்தான் இப்போது வந்துள்ளேன்.

வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்ற கேள்விக்கு, எங்களைப் பொருத்தவரை 214 தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ளவையே. ஒவ்வொரு கட்சிக்கும் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இதையும் படிங்க: "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, தற்போது அத்தகைய நிலை இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்று இரு தரப்பினரும் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அதிமுக பொதுச்செயலாளரும் சொல்லிவிட்டேன், தவெக தலைவரும் சொல்லிட்டாரு, ஆனால் நீங்கள் தான் விடமாட்டேன் என்கிறீர்கள். எனவே, புதிய கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை. பாஜக உடன் கூட்டணி குறித்தும் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் அவர்களை சந்திக்கவில்லை; அவர்களும் எங்களை சந்திக்கவில்லை.

அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அமித் ஷாவை சந்திக்கிறார்களா என்ற கேள்விக்கு, அரசியல் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கமான விஷயமே. அதற்கு அப்பாற்பட்ட எந்த தகவலும் இல்லை. தேமுதிக கூட்டணியில் சேராததால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் மற்ற கட்சிகளுக்கு செல்லும் என்ற தகவலும் உண்மையல்ல. இவை அனைத்தும் யுகங்களே. இன்னும் நான்கு நாட்களில் அனைத்தும் தெளிவாக அறிவிக்கப்படும்.

எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று வருகிறது. எந்த சிக்கலும் இல்லை. கூட்டணியில் உள்ள கட்சிகள் பரஸ்பரம் ஒத்துழைத்து, யாருக்கு எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்த அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக்கூறினார். 

இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share