×
 

திக்... திக்... திகிலில் எடப்பாடி... கூண்டோடு பதவி விலகல்... அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அறிவிப்பு...!

தவெகவுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கும்படி தெரிவித்தோம் ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழிவும் பாதைக்கு கொண்டு செல்கிறார், யாரையும் அரவணைத்து செல்லவில்லை, கட்சிக்கு உழைத்தவருக்கு பதவி வழங்காமல் கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கிவிட்டு கட்சியை அழிக்க நினைத்தவருக்கு புதிய பதவி வழங்கியுள்ளார் அதனால் தெற்கு மாவட்ட அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் 1170 பேர் அதிமுகவிலிருந்து விலகுகிறோம்.

எம்ஜிஆர் ஜெயலலிதா கொள்கைக்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டதால் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமியை மாற்றம் செய்தால் நாங்கள் அதிமுகவில் தொடர்வோம்.

அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியிலிருந்து நீக்கியவர்களுக்கு மீண்டும் பதவி வழங்காமல் கட்சியில் இருந்து ஒதுங்கியவர்களுக்கு புதிதாக மாவட்ட செயலாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி பதவி கொடுத்து வருகின்றார். 

இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த மேஜர் விக்கெட்! தவெக தாவ தயாராகும் கே.சி.பழனிசாமி! ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப் போல் அவரால் கட்சியிலிருந்து நீக்கியவர்களுக்கு பொறுப்போ பதவியோ வழங்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகுவது சிரமமாகத்தான் இருக்கிறது. கட்சியிலிருந்து விலகியவர்களை வரவழைத்து கூட்டம் போட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடவில்லை அனைவரையுமே கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்களை அழைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைப்போம் நான் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தவெகவுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கும்படி தெரிவித்தோம் ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

தற்போது அதிமுகவிலிருந்து விலகியவர்களில் பெரும்பாலான தவெகவில் இணையலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர் மீண்டும் கூட்டம் போட்டு பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட முடிவை நாங்கள் அறிவிப்போம்....

எந்த கட்சியில் இருந்தாலும் உழைத்து தான் நாங்கள் பதவிக்க வந்துள்ளோம் அதனால் எந்த கட்சிக்கு சென்றாலும் நாங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்..... புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட பிகே. வைரமுத்து தெரிவித்துள்ளார். 


 

இதையும் படிங்க: "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share