×
 

செங்கோட்டையனுக்கு திமிரு.. அகங்காரம்..!! பரப்புரையில் பந்தாடிய EPS..!

கோபிச்செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். செங்கோட்டையன் மீது அவரது மனைவி மற்றும் மகன் புகார் அளித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதாவை செங்கோட்டையின் மதித்ததே இல்லை என்றும் செங்கோட்டையன் மோசமான மனிதர் எனவும் ஜெயலலிதா கூறினார் என்றும் தெரிவித்தார்.

தனது அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக செங்கோட்டையன் கண்ணீர் வடித்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் இருந்த போதே உளவாளியாக இருந்தவர் செங்கோட்டையன் என்றும் சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்து பேசாதவர் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். முதல்வராக இருந்த போதே ஆதாரம் சேகரித்து விட்டதாகவும் செங்கோட்டையனுக்கு எதிராக அவ்வளவு ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனால் கோபிசெட்டிபாளையம் சாலையில் நடமாட முடியாது என்றும் கூறியுள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் யாரையும் வளர விட மாட்டார் என்றும் அவரால் தான் முத்துசாமி போன்றோர் கட்சியை விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுக்க மாநில அரசு நிதியில் மேற்கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள அவர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து ரூபாய்..! கொள்ளையடித்த அரசாங்கம் வேணுமா..? இபிஎஸ் கேள்வி..!

ஜெயலலிதாவை இழந்த பிறகு தாயில்லாத பிள்ளையாக தவித்த போது அதிமுகவை உடைக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவை இழந்த பிறகு அதிமுகவை உடைக்கும் முயன்றவர்களுக்கு துணை போனவர் செங்கோட்டையன் என்றும் தெரிவித்தார். அதிமுகவில் யாரையும் வளர விடாதவர் செங்கோட்டையன் என்று கூறிய அவர் சிறுமையாகப் பேச ஆரம்பித்ததும் செல்வாக்கை இழந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார். திமிரு பிடித்த மற்றும் பொறாமை குணம் கொண்டவரான செங்கோட்டையன் நாட்டிற்கு தேவையா என்றும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பேசினார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும் அகங்காரத்தின் காரணமாகவும் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சேலம் அதிமுகவின் கோட்டை..! தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பம்..! விளாசிய EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share