×
 

அதிமுகவில் அதிகாரப்போர் தீவிரம்..! CV சண்முகத்தை பொளந்து கட்டிய EPS தரப்பு ஆதரவாளர்கள்..!!

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதிமுக தற்போது இரண்டாக மீண்டும் பிளவு பட்டிருக்கிறது. 47 எம்எல்ஏக்கள் அதிமுக தரப்பில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதனால் கட்சியில் மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. வேலுமணி தரப்பு, இபிஎஸ் தரப்பு என பிரிந்து விட்டது.

வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனி அணி உருவாகி இருக்கிறது. தேர்தலில் தோற்றதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுயநலத்திற்காக அதிமுகவை சி.வி. சண்முகம் அழிப்பதாக தெரிவித்தார். சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் பதவியை அளித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைய சிவி சண்முகம் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ADMK படுதோல்வி… EPS மீது CV சண்முகம் நேரடி குற்றச்சாட்டு.! வெடிக்கும் அதிமுக உள்கலகம்!

சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் பதவியை அளித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று குறிப்பிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்றத் தேர்தலில் தோற்ற சிவி சண்முகத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் தெரிவித்துள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமி எடுக்க முடிவிற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கட்டுப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share