×
 

தமிழகத்தில் அமலாகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?... விஜய்க்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சனையா மக்கள் மாளிகையை அணுகவும் என்று  தமிழ்நாடு  பொறுப்பு ஆளுநர் அறிவிப்பு செய்துள்ளார் .

ஆளுநரிடம் கொடுத்த உறுதியை மீறி பகிரங்கமாக  குதிரை பேரத்தை தொடர்ந்து நடத்தினால் இந்திய அரசியலமைப்பின் 356 சட்டப்பிரிவு த.வெ‌.க.அரசின் மீது பாயுமா முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  கேள்வி எழுப்பியுள்ளார். 

தவெக அரசை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2 ஆம் தேதி மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் ஆளுநர் நான் நிகழ்ச்சிக்கு வரும் வழியில் வைகை ஆற்றை கடந்து வந்தேன் ஆறு இருக்கிறது ஆனால் தண்ணீர் எங்கே காணோம்  ஆச்சரியப்பட்டேன் என்று பேசினார்.

ஆறு என்றால் அதில் தண்ணீர் இருக்க வேண்டும், எனவே இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால்  மதுரை சேர்ந்த இளைஞர்கள் இதனை இலக்காக மாற்றி முயற்சி செய்யுமாறு அழைப்பு விடுத்ததோடு மட்டுமல்லாமல், அப்படி யாரும் முன்வராவிட்டால் மக்கள் பவன் முன்னென்று முயற்சி செய்து அந்த காரியத்தை முடிக்கும் என்று உறுதிப்பட கூறினார்.

இதையும் படிங்க: ரூ.800 கோடிப்பே... தவெகவை வளர்க்க கோடிகளை கொட்டிக்கொடுத்த சாராய ஆலை உரிமையாளர்கள்... ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு...!

அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் ஆணையர் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்கள் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது .
இந்த ஆலோசனையில் நீர்நிலைகள் பராமரிப்பு, பொது சுகாதாரம் ஆகியவற்றிக்கான மத்திய அரசின் திட்டங்களை குறித்தும்  ஆளுநர் பேசியிருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது 
அதோடு மதுரை மாநகர் காவல் ஆணையர்யுடன் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் ஆலோசனை நடத்தியுள்ளார். 

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் மேதகு ஆளுநர் உரையில் த.வெ.க அரசு என்ன எழுதிக் கொடுத்ததோ, அதை அச்சு பிறழாமல்,அடி பிறழாமல் வாசித்து ஆச்சிரியத்தை ஏற்படுத்திய மேதகு ஆளுநர், தற்போது த.வெ.க ஆட்சி அமைந்த இந்த 2 மாதங்களிலே விஜய் ஆட்சி நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசரமும், அவசியமும் ஏன் இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிறது .அதுதான் இன்றைய முக்கிய விவாதமாக தமிழகத்தில் விவாதிக்கப்படுகிறது.த.வெ.க ஆட்சியின் மீது ஆளுநர் நம்பிக்கை இழந்துவிட்டாரா? 

தினந்தோறும் தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் ஆளுநர் நம்பிக்கை இழந்து விட்டாரா ?பெண்கள் பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது அதனால் நம்பிக்கை இழந்துவிட்டாரா ?
போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த த.வெ.க அரசு தவறி இருக்கிறது அதனால் நம்பிக்கை இழந்துவிட்டாரா? 

முழுமையாக பயிர்கள் தள்ளுபடி செய்யவில்லை என்று விவசாயிகள் போராடுகிறார்கள், தூய்மை பணியை தனியார் மூலமாக திட்டம் வைத்திருக்கிறார்கள், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதை சீர் செய்யவில்லை,. ஆட்சி அதிகாரத்திலே தலையிடும் விஜயின் பவர்கள் சென்டர்கள்,  அமைச்சரவை கூட்டத்திலேயே பங்கேற்கும் விஜய்யின் நட்பு வட்டாரங்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, பழனிச்சாமி போன்றவர்கள் அரசின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்படும் நபர்கள் குறித்து தொடர்ந்து எழுந்து வரும் சர்ச்சைகள், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தொடர்ந்து லஞ்ச லாவண்ய புகார்கள்,
டாஸ்மாக் விலை உயர்வுக்காக லஞ்ச புகார், மேகதாது அணை பிரச்சனைகள் 

இதை எல்லாம் விட த.வெ.க ஆட்சியின் பெரும்பான்மை ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்காக
செயற்கையாக உருவாக்குவதற்கு பகிரங்கமாக குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட்டு வருவதனால்,  தமிழ்நாட்டு மக்கள் முகம் சுளிக்காதவர்கள் எவரும் இல்லை.

 தேர்தல் முடிந்த பின்னர் அதிக எம்எல்ஏக்களை பெற்ற கட்சி த.வெ.க. கட்சி என்ற அடிப்படையிலே ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுநர் அழைத்தபோது, விஜய்யிடம் போதிய எண்ணிக்கை எம்எல்ஏக்கள் உங்களிடம் இல்லை ஆகவே இதை ஈடுகெட்ட குதிரை பேரத்தில் ஈடுபடக்கூடாது .அத்தகைய குதிரை பேரத்தை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக  பதவி ஏற்புக்கு முன்பாக ஆளுநர் விஜயிடம் உறுதி வாங்கியதை இப்போது காற்றிலே பறக்க விட்டாரா விஜய். 

தற்போது விஜய் பகிரங்கமாக நடத்தி வருகின்ற குதிரை பேரம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்து இருக்கிறது. .ஆகவே மேலும் ஆளுநர் இந்த ஆய்வின் நடவடிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக தான்  என்று எடுத்துக் கொள்ளலாமா?

 ஆளுநர் மக்கள் மாளிகைக்கு இன்றைக்கு  மக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது விஜய் தலைமையான த.வெ‌க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை இந்திய அரசின் சட்டப்படிதடுத்து நிறுத்தும் பொறுப்பும் கடமையும் மேதகு ஆளுநருக்கு இருக்கிறது. இந்த ஆட்சியின் ஜனநாயக விரோத, ஜனநாயக படுகொலைக்கான அந்த விவரங்களை உள்துறைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பும் கடமை இருக்கிறது. 

ஆட்சி விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை தொடருமானால், குதிரை பேரத்தை நடத்தினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது அதிலே இந்திய அரசியலமைப்பு சட்டம்  356 பிரிவின் வலிமை என்ன, அதனுடைய விளைவு என்பதையும்விஜய்  அறிந்திருப்பார்கள் ஆனால் இந்த குதிரை பேரத்தை end கார்டு போட்டு நிறுத்த முன்வருவாரா விஜய் என கேள்வி எழுப்பினர்.

சட்டப்பிரிவு 356 சொல்வது என்ன? 

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 356, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியடையும் போது (Failure of Constitutional Machinery) அல்லது மாநில அரசு அரசியலமைப்பு விதிகளின்படி செயல்பட முடியாத போது, குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல்படுத்துவது பற்றி கூறுகிறது.

இதையும் படிங்க: வயிறு பத்தி எரியுது... ‘அ.மு’... ‘அ.பி’ என்ன செஞ்சீங்க விஜய்?... கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share