×
 

எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசிக்கும் அதிமுக வர்த்தக பிரிவு நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து தற்கொலை .

அதிமுகவின் தோல்வி, கட்சியில் ஏற்பட்ட பிளவு, இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது முடிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டு இன்று இரவு தீக்குளித்து தற்கொலை.
 இவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த அதிமுக பிரமுகர் மகேந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்த  இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பனந்தாள் வருகிறார் . இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

 திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசித்தவர் மகேந்திரன் .(வயது 32) இவர் அதிமுக வர்த்தக அணியின் பொறுப்பாளராக  இருந்தார் . தீவிர அதிமுக விசுவாசியான இவர் அதிமுக தோல்வி,  அதனை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை அதிமுக ஒன்றிணைைய வேண்டும் . அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது. அடுத்த பிறவியில் அதிமுகவின் எளிய தொண்டனாக பிறக்க வேண்டும் .
தனது உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைக்க வேண்டும் என்று  கூறி முகநூலில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

இதையும் படிங்க: இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!

அப்போது திருப்பனந்தாள் அருகே பாலூர் என்ற இடத்தில் ஒருவர் எரிந்து வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்தவர் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது.
 உடனடியாக உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

 தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பாரதி மோகன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

 இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று காலை 11 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி திருப்பனந்தாள் வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
 

இதையும் படிங்க: "தயங்காதீங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share