×
 

முடிவு பெருசா இருக்குமோ? செங்கோட்டையன் தீவிர ஆலோசனை! கலக்கத்தில் கட்சியினர்

வரும் ஐந்தாம் தேதி மனம் திறந்து பேச இருப்பதாக கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.

கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.

செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். 

இதையும் படிங்க: WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!

இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். என்ன கருத்து சொல்லப் போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம் அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். மேலும், 16 ஒன்றிய செயலாளர்கள், 3 நகர செயலாளர் 14 பேரூர் கழக செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: இதைவிட அதிமுகவை யாராலும் கேவலப்படுத்த முடியாது.. எல்.முருகன் பேச்சுக்கு இயக்குனர் அமீர் ரியாக்ஷன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share