"இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!
போலீஸ் காவலில் போது உயிரிழந்த ஆகாஷ் உடலை பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், காவல்துறை மீதான கடும் குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியது. மார்ச் 8, 2026 அன்று அவர் உயிரிழந்ததிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ஆனந்தி ஆகியோர், “குற்றம்சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் இரு பேரை அரிவாள், பட்டாக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியபடி, ஆகாஷ் தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மார்ச் 8 அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த விளக்கத்திற்கு ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உடலை பெற்றோர் இதுவரை வாங்காமல் இருந்து வருகின்றனர். 100 நாட்களை கடந்த நிலைகள் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் காவலில் இருந்தபோது மரணம் அடைந்த ஆகாஷின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!
மனுதாரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் உடலை பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆகாஷின் பெற்றோர் இன்று மாலைக்குள் உடலை பெறாவிட்டால் காவல்துறையை நாளை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்போம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!