×
 

கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

குழப்பங்களை தடுக்க, யாரும் தங்கள் இஷ்டத்துக்கு பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என பாஜவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கடந்த ஏப்ரல் 11ல் அதிமுக-பாஜ இடையே கூட்டணி உருவானது. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியும், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 22ம் தேதி, மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம். பெரியார், அண்ணாதுரையை விமர்சிப்பதை பொறுக்க மாட்டோம் என அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்தது.

இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்கும். 

இதையும் படிங்க: சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படை வேட்டை.. 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..

முதல்வர், அ.தி.மு.க.,வில் இருந்து வருவார் என அமித் ஷா கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, முதல் பொதுத் தேர்தலில் இருந்தே கூட்டணி ஆட்சி அமையவில்லை. கூட்டணி அமைத்து வென்றாலும், தி.மு.க., - அ.தி.மு.க., தனியாக ஆட்சி அமைக்கின்றன.

எனவே, கூட்டணி ஆட்சி என்ற வாதத்தையே அ.தி.மு.க., எப்போதும் ஏற்றதில்லை.அதுபோல, முதல்வராக பழனிசாமி வருவார் என்று கூறாமல், அ.தி.மு.க.,வில் இருந்து வருவார் என அமித் ஷா கூறியுள்ளார்.

கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் குறித்த அமித் ஷாவின் பேட்டி தான், அ.தி.மு.க.,வுக்குள் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அமித் ஷாவின் கருத்து அ.தி.மு.க.,வினரிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அது பற்றி இப்போது பேசுவது தேவையற்றது. ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து வெறும் வாயில் மெல்பவர்களுக்கு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி, ஹிந்து முன்னணி அவல் கொடுத்தது. 

இப்போது, அமித் ஷாவும் அவல் கொடுத்திருக்கிறார்.தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் அனைத்தையும் தீர்மானிக்கும்.  இதை, பொதுவெளியில் பேசி விவாதமாக்க விரும்பவில்லை.

அமித் ஷா பேச்சுக்கு பதில், எதிர்ப்பு என எதையாவது பேச மாட்டோமா என்று தி.மு.க., எதிர்பார்க்கிறது. அதற்கு இடம் தந்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, இப்போதைக்கு அமைதி காப்பதே நல்லது என்ற முடிவை எடுத்திருக்கிறோம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதே போல கூட்டணி ஆட்சி தொடர்பாக, யாரும் பொது வெளியில் தங்களின் இஷ்டத்துக்கு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என, கட்சி நிர்வாகிகளை தமிழக பாஜவும் எச்சரித்து உள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக, பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டு உள்ளார்.  இதற்காக, அவரே சென்னை வந்து, அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார். அன்று முதல், இந்த கூட்டணியை உடைக்கும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டு வருகிறது. 

எனவே, தேவையற்ற குழப்பங்களை தடுக்க, யாரும் தங்கள் இஷ்டத்துக்கு பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என பாஜவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரொம்ப சரியா சொன்னீங்க!! ராஜ்பாஷை தேவையில்லை.. அமித் ஷா சொன்னதை வைத்தே ஆப்பு வைத்த கனிமொழி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share