×
 

வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்த திமுக முயற்சிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவள்ளூரில் பொதுக்குழு கூட்டம் நடத்திய அன்புமணி இன்று காஞ்சிபுரத்தில் நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது; நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள்.

எங்கிருந்து வந்தார்கள் எப்படி வந்தார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. இதை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் நோக்கத்தில் இருக்கிறார்கள். பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சிக்கிறது. நான்கு ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தருவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது. பாமகவில் உள்ளவர்களும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

பாமகவிற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும். பாமகவை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. வன்னியர்களுக்கு மட்டும் பாமக இட ஒதுக்கீடு கேட்கவில்லை. பாமகவின் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்., சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும். அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸுக்கும் தெரியும்.

தப்பே செய்யாமல் என் அப்பா ராமதாஸிடம் நான் மன்னிப்பு கேட்டேன். திமுக தான் நம் எதிரி., எனவே பாமகவுக்குள் பிரச்சனை வேண்டாம். என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளார்கள். அண்ணன் தம்பிகளாக இருக்கும் நமக்குள் பிரச்சனை வேண்டாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதையும் படிங்க: அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share