எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்.. ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி..!
2024 சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் கூறிதான் பாஜகவுடன் கூட்டணி பேசியதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக பேசிய பரபரப்பான பேட்டியில், தனது மகன் அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி சௌமியாவும் தன்னை வற்புறுத்தியதால் பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார்.
இந்தக் கூட்டணி முடிவு, அதிமுகவுடன் இயற்கையான கூட்டணி அமைப்பதற்கு எதிராக அன்புமணியின் அழுத்தத்தால் எடுக்கப்பட்டதாகவும், இதனால் தேர்தலில் பாமக எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அன்புமணியும் சௌமியாவும் இரு கால்களைப் பிடித்து கெஞ்சியதாகவும், அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பாஜக ’ஷாக்’... திமுக ‘ராக்’.. ராமதாஸ் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பின் பின்னணி...!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவரை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார், மேலும் ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், கூட்டணி குறித்து எவ்விதப் பேச்சும் நடைபெறவில்லை என்றும் கூறினார். இருப்பிடம் செல்ல பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 2024 தேர்தலில் ராமதாஸ் கூறியதால் தான் பாஜகவோடு கூட்டணி பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தன் மீதும் தனது மனைவி சௌமியா மீதும் ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு பாமக தலைவராக இருக்குமாறு ஐயா கூறினார். ஐயாவிற்கு பிறகு தான் பொறுப்பை ஏற்பேன் என்று கூறினேன் என்று தெரிவித்தார். ராமதாசுடன் இருக்கும் மூன்று பேர் தன்னுடைய சுய லாபத்திற்காக அவரை பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
எனது தந்தை ராமதாஸ் அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணிக்கு வேண்டாம் என சொல்லப் போகிறேன் என்றும் ராமதாஸ் கூறியதால் தான் 2024 தேர்தலில் பாஜகவோட கூட்டணி பேசினேன் எனவும் அன்புமணி தெரிவித்தார். சி.வி சண்முகம் தைலாபுரம் வருகை குறித்து நான் கேட்டபோது அவர் பத்திரிக்கை வைப்பதற்காக வந்தார் என ராமதாஸ் கூறினார் என்றும் தெரிவித்தார்.ஐயா கூறியதால் தான் பாஜகவினர் தைலாபுரம் வந்தனர்., உணவு பரிமாறப்பட்டது தற்போது இல்லை என்கிறார்., என தெரிவித்தார்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், காங்கிரசுக்கும் ராமதாஸ் மீது ஏன் இந்த திடீர் பாசம் என்ற கேள்வி எழுப்பிய அவர் இவை அனைத்தும் திமுகவின் சூழ்ச்சி என்று கூறினார். என்றாவது ஒருநாள் ராமதாசை விசிக தலைவர் திருமாவளவன் புகழ் பேசிய உள்ளாரா தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார். திமுக தான் நமது எதிரி., திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள் என்று தெரிவித்தார். பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வரிப் போட்டு விவசாயி வயித்துல அடிக்காதீங்க... நிலத்தடி நீர் வரிக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!