×
 

#BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் ஆத்தூரில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் திமுக - தவெக இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

ஜூன் 20 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார். அப்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையில் பேசியதுடன், அவரது சினிமா பின்னணி, சட்டமன்றத்தில் அவரது தோற்றம் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார். இது அவரை அவதூறாகவும், அரசியல் மரியாதைக்கு உட்படாத வகையிலும் பேசியதாகக் கருதப்பட்டது. இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக நகரச் செயலாளர் செல்வம் என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என அஞ்சிய அனிதா ராதாகிருஷ்ணன், ஜூலை 1 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி, “சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இப்படி பேசலாமா? யார் ஆனாலும் முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்று வாய்மொழியாகக் கூறினார். அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு தேவையற்றது என்று கருத்து தெரிவித்தார். தொடர்ந்து முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில்,முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

 

இதையும் படிங்க: உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share