அண்ணா பல்கலை. வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு... அல்லிகுளம் நீதிமன்றம் அறிவிப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் டிசம்பர் 25-ஆம் தேதியன்று 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சார்கள், தம்பிகளுடன் திமுகவுக்கு என்ன தொடர்பு.? விலாவரியா விளக்குறீங்களா.? எல். முருகன் கிடுக்கிப்பிடி!
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தீர்ப்பை சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அண்ணா பல்கலை. வழக்கு..! சிபிஐக்கு மாற்ற அவசியமே இல்லை.. டிஜிபி விளக்கம்..!