தமிழகமே எதிர்பார்த்த நாள் - ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு...!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
2024 டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டிசம்பர் 25ம் தேதி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.
இந்நிலையில் 2025 ஜனவரி 5ஆம் தேதி கைதான ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததை எடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பிப்ரவரி 21 ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இதை தொடர்ந்து மார்ச் 7ம் தேதி வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஏப்ரல் 8ம் தேதி வழக்கிலிருந்து ஞானசேகரனை விடுவிக்க மறுத்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 21 முதல் 23 ஆம் தேதி வரை இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மே 23 ஆம் தேதி வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: உங்க துருப்பிடித்து போன இரும்புக் கரத்தை ரிப்பேர் பண்ணுங்க.. முதல்வர் ஸ்டாலினை நயினார் பங்கம்!
கடந்த மே 28ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி ஜூன் இரண்டாம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என கூறியிருந்தார். இதன்படி ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரன் குற்றவாளி - அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிபதி அதிரடி அறிவிப்பு!