×
 

தேர்தலுக்காக பலிகடா ஆக்காதீர்கள்!! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த வார்னிங்!

கோவையில் மக்களை தேர்தலுக்காக மக்களைப் பலிகடா ஆக்காதீர்கள் என அண்ணாமலை விடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் உள்ளூர் மக்களும் இதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாகியும் சிறுத்தையைப் பிடிக்க முடியாதது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பகலில் கூட வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் அளவுக்கு மக்கள் பயத்தில் உள்ளனர்.

இந்தச் சூழலில் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார். “ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையும் மக்களும் உறுதி செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், அந்த சிறுத்தை இன்னும் பிடிபடாமல் சுதந்திரமாக உலா வருவது மக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் எங்கே தூங்கிக் கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!

 

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது.… pic.twitter.com/iMLIG6BMz7

— K.Annamalai (@annamalai_k) April 3, 2026

மேலும், “தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் முழுவதும் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில், மக்களின் உயிர் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்யக் கூடாது” என்று தெளிவாகச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, வனத்துறை உடனடியாகத் தலையிட்டு அதிநவீன கேமரா டிராப்கள், தானியங்கி கூண்டுகள், பாதுகாப்பு வலைகள் மூலம் விஞ்ஞானபூர்வமான முறையில் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு வினாடியும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி வனத்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த வீடியோ பதிவு வனத்துறை அதிகாரிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share