×
 

ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் விவகாரத்தில் செல்வப்பெருந்தகை ஏன் பதற்றமடைகிறார் என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை அண்ணாமலை தரவுகளின் அடிப்படையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், தனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று கேட்பதாகவும், அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!

ஒரு பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு என்று கூறியுள்ள அவர், செல்வப்பெருந்தகை அவர்கள், தனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்வதாகவும் வேண்டுமென்றால், அவருக்கு வாட்சப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த வீடியோவில் வந்த வார்த்தைகள்... வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share