டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!
தஞ்சை விவசாயிகள் மீதான கைது நடவடிக்கைக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் விவசாயிகள் ஆரூரான் சர்க்கரை ஆலையை எதிர்த்து ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தஞ்சைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என கூற முற்பட்டனர். அவர்களை போலீசார் கைது இந்த சம்பவத்திற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா.,நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது., நான்கு வருடங்களில் நீங்கள் போட்ட வேடங்களில், தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது என கூறியுள்ளார்.
உடனடியாக, கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புல்லட் பாண்டி.. அழுத்தமா அடிங்க.. முதலமைச்சரை கிண்டல் அடித்த அண்ணாமலை!!