2.0-வாம் ல.. கூச்சமே இல்லையா? வீட்டுக்கு போங்கய்யா..! கொக்கரித்த பாஜக தலை..!
திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் காத்திருக்கும்போது வெர்ஷன் 2.0 என கூறி முதலமைச்சர் ஸ்டாலின் பயமுறுத்தி இருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களை முதலமைச்சர் ஸ்டாலின் பயமுறுத்தி இருப்பதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு, தமிழக பாஜகவால் பலமுறை வலியுறுத்திய பிறகே, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறினார். அதுவும், தகுதியுடைய என்று கூறி, பல லட்சம் தாய்மார்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை திமுக அரசுதான் முதன்முதலில் வழங்கியதாகக் கதைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவிழ்த்து விடுகிறார் என்றும் என்ன இருந்தாலும், ஒரு கதாசிரியரின் மகனல்லவா எனவும் விமர்சித்தார்.
தமிழகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நிலவுகிறது., நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்களை எல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமான தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என்று எளிதாகக் கடந்து செல்ல, முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா என கடுமையாக சாடியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி சாராய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு பதிலுக்கு ஆவின் பால் கொழுப்பில் கூட ஊழல் செய்யலாம் என்று கண்டுபிடித்தவருக்கு, மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்ப்பதாக கூறினார்.
ஓர் அமைச்சரவையில், தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா? என உங்கள் தந்தை கருணாநிதி உங்களுக்காகவே இதை எழுதி வைத்ததாகவும், திமுகவிற்கு 2026 ஆம் ஆண்டு தமிழக மக்கள் வழங்கப் போவது, படுதோல்வி மட்டுமே என்றும் அண்ணாமலை தெரிவித்தார்
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் மூழ்கிய அண்ணாமலை.. அமெரிக்க கோவிலில் மோடி பெயரில் அர்ச்சனை..!