திருத்தணியில் மற்றொரு வன்முறை சம்பவம்... தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்... அண்ணாமலை கண்டனம்..!
திருத்தணியில் நடந்துள்ள மற்றொரு வன்முறை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த ஒடிசாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கே. சூரஜ் என்பவர், நான்கு 17 வயது சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.இந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இத்தாக்குதலை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை படுத்தியது. இந்த நிலையில் மற்றொரு சம்பவம் திருத்தணியில் நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், மாநிலத்தின் மனசாட்சி மீண்டு வருவதற்கு முன்பே, திருத்தணியில் நேற்று மற்றொரு அர்த்தமற்ற வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஜமால் என்ற உள்ளூர் தொழிலதிபர், எந்தவித தூண்டுதலும் காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு... இனிமேதான் எங்க ஆட்டம் இருக்கு... நயினார் உறுதி...!
இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது எனவும் கூறியுள்ளார். சட்டமின்மை இயல்பாக்கப்பட்டு வருகிறது, குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், மற்றும் சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை, திமுக ஆட்சியின் கீழ், பொதுப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது என்று கூறினார். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தனது முழுமையான தோல்வியை திமுக ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை சூரஜ்களும் ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்!! தமிழகத்தில் காட்டாட்சி ராஜ்ஜியம்! அண்ணாமலை குற்றச்சாட்டு!