×
 

கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

சபாநாயகர் பிரபாகர் பேட்டிக்கு பிறகு அப்பாவு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அதிமுகவில் கடும் பிளவுகள் ஏற்பட்டன. 47 எம்எல்ஏக்களில் 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். பிறகு எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிமுக பிளவுகள் சரி செய்யப்பட்ட நிலையில் சபாநாயகர் இடம் வழங்கப்பட்ட கடிதங்கள் மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான வலியுறுத்தல்கள் பின்வாங்கப்பட்டன.

இந்த நிலையில் அதிமுகவினர் 21 பேர் பதவி தப்பி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நான்கு கடிதங்களை அனுப்பி இருப்பதாக சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் தெரிவித்தார். 21 பேரை மன்னிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அளித்து இருப்பதாக கூறியுள்ளார்.

சபாநாயகர் பிரபாகருக்கு அப்பாவு சரமாரி கேள்விகளை முன் வைத்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க 13.05.2026 பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கட்சி கொறடா உத்தரவையும் மீறி ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அப்பாவு வெற்றி..! சுப்ரீம் கோர்ட் பேச்சை மீறிய ஹைகோர்ட்..!! இன்பதுரை மேல்முறையீடு..!!

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொடுத்த மன்னிப்பை ஏற்று தகுதி நீக்கத்தை ரத்து செய்ததாக பேரவை தலைவர் அறிவித்துள்ளார்கள். அதே புகார் மனுவில் கூறப்பட்ட மீதி 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என்று கேள்வி எழுப்பினார்.

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ வா அல்லது விஜயபாஸ்கர் எம்எல்ஏ வா என்று கேட்டுள்ளார். அறிவிப்பு சரியா, அறிவிக்கையாக, notification-ஆக வெளியிடப்பட வேண்டாமா? என்று அப்பாவு கேட்டார். மேலும் எடப்பாடி நிறுத்தி மட்டுமே செய்துள்ளார். தகுதிநீக்க மனுவை திரும்பபெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share