×
 

அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!

விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி அப்பாவு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாராயணன்புதூர், ஈத்தங்காட்டைச் சேர்ந்த சபரிவர்மன் (34) என்பவர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜூலை 8 அன்று நாகர்கோவில் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “தென் தாமரைகுளம் காவல் நிலையத்தில் சபரிவர்மன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்குப் பிறகு அவருக்கு என்ன நடந்தது? நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மரணம் ஏற்பட என்ன காரணம்? மரணத்தை மறைத்து அனாதைப் பிணம் எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத வைப்பறையில் வைத்த மர்மம் என்ன?” என்று கேள்விகளை எழுப்பினார்.

மேலும், “திருப்புவனம், மடப்புரம் அஜித் குமார் காவல் நிலைய மரணத்தின் போது, ‘CM sir, உங்களுக்கு ஆட்சி எதற்கு? உங்களுக்கு முதலமைச்சர் பதவி எதற்கு?’ என்று நீங்கள் ஓலமிட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா CM sir? எதற்கும் பதில் சொல்லாமல் கள்ள மௌனம் காட்டுவது ஏன்?” என்றும் அப்பாவு கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜித் குமார் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, குடும்பத்திற்கு ரூ.32.5 லட்சம் நிவாரணம் வழங்கி, அவரது சகோதரருக்கு அரசு வேலையும் வழங்கியது போல், உடனடியாக சபரிவர்மன் மரணத்திற்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவீர்களா என்று CM sir-ஐ நேரடியாக வினவினார் அப்பாவு.

இதையும் படிங்க: சட்டம் தெரியாதா.? ஆணவ வசனம் எப்படி வந்துச்சு..? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் காவல் துறை மற்றும் சிறை நிர்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சபரிவர்மனின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: CBI கேட்பீங்களா..? எதிர்க்கட்சிகளை மிரட்டுவீங்களா.? சொல்லுங்க CM..! விளாசிய அப்பாவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share