சொத்துக்குவிப்பு வழக்கு... குற்றச்சாட்டு பதிவு வேண்டாம்! ஆ.ராசா நீதிமன்றத்தில் சொன்ன விஷயம்?
சொத்து குவிப்பு வழக்கில் ஆ. ராசா மனு தாக்கல் செய்த நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்வது 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியது. 1999 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி அரசியல் அமைச்சராக இருந்தது முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி அவர் கூடுதலாக சொத்துக்களை சேர்த்துள்ளார் என்று கூறப்பட்டதன் அடிப்படையில் ஆ ராசாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் 2015 ஆம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தியது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 2015ல் ரெய்டு நடத்தப்பட்டது. வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, அதாவது 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு ஆ. ராசா சொத்துகளை குவித்துள்ளதாக சிபிஐ கூறியது.
இதையும் படிங்க: எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!
இந்த சொத்து குவிப்பு வழக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும் என்றும் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னையில் எம்பி எம்எல்ஏக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான திமுக எம்.பி. ஆ.ராசா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதனை அடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்வது 23 ஆம் தேதியிலிருந்து ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!