×
 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... சிபிஐக்கு மாற்றக் கோரிய பொற்கொடியின் மனு ஒத்திவைப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய பொற்கொடியின் மனு செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் கூறினார்.

இதையும் படிங்க: கன்னட நடிகர் தர்ஷன் கைது… ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் கர்நாடகா போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள 26 பேரில் நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பொற்கொடி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ க்கு மாற்றக்கோரி ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், பொற்கொடி வழக்கை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் சகோதரார், சிபிஐ க்கு மாற்ற கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொற்கொடியின் வழக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கீனோஸ் வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு பொற்கொடி வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொற்கொடி தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் ஒத்தி வைத்தார். 

இதையும் படிங்க: கொலையாளிகள் முழு விவரம் என்கிட்ட இருக்கு! MLA மகேந்திரன் பரபரப்பு பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share