ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு.. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பகீர் குற்றச்சாட்டு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றகோரி அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் உறவினருக்கு ஸ்கெட்ச் போட்ட சிபிஐ... சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!
இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதால் மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என்பதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். முக்கிய குற்றவாளிகளான சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணனை கைது செய்ய போலீசார் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!