ஆணவக் கொலையா.? சிறுமியின் தந்தை அதிரடி கைது..! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!
மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிட்டு நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் இளைஞரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினி (16). இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சேர உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இச்செய்தி பெண் வீட்டாருக்கு தெரிய வர இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை நடந்துள்ளது. பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் நேற்று பி.சி.ஆர். வழக்கு பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளனர். இரவு சுமார் மூன்று மணி அளவில் இருவரும் சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர்.
இச்சம்பவத்தை அந்த பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரிடாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியில்லை! கசிந்ததது அறிவாலய தகவல்!! அடுக்கும் காரணங்கள்!
மயிலாடுதுறையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 16 வயது சிறுமியின் தந்தை, சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஆணவ கொலையா என்ற கோணத்தில் பொறையார் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். 19 வயது பார்த்திபன், 16 வயதான அவரது காதலியும் தூக்கில் தொங்கிய நிலையில் கால்களும் தரையில் பதிந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பார்த்திபனின் வீட்டார் காதலி வீட்டையும், காதலிவிட்டார் காதலன் வீட்டையும் சூறையாடிய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “அதிமுகவுக்குள்ள அப்படி என்ன தான் நடக்குது?”... தவெகவுக்கு தாவும் மாஜிக்களால் கொதித்தெழுந்த திருமா...!