×
 

உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வெற்றிக்குப் பின் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சூழலில் நடைபெற்றுள்ளது. முன்னதாக வடக்கு மண்டல ஐஜியாகப் பணியாற்றிய அஸ்ரா கார்க், அவினாஷ் குமாரை மாற்றி இப்பதவிக்கு வந்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வந்தது.

அஸ்ரா கார்க் 2004-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழ்நாடு கேடரில் பணியாற்றி வருகிறார். தாப்பர் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் பட்டம் பெற்ற இவர், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர். அவரது பெற்றோர் இருவரும் ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள். 

2025 செப்டம்பர் 27-ல் கரூரில் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை தாங்கினார் அஸ்ரா கார்க். பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கான மானிட்டரிங் பேனலிலும் இடம் பெற்றார். இந்தப் பொறுப்புகள் அவரது நேர்மை மற்றும் திறமையை மீண்டும் உறுதிப்படுத்தின. 

இதையும் படிங்க: உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம்..! 8 வாரம் தான் டைம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!

தற்போது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்ட அஸ்ரா கார்க், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பதவி மாநிலத்தின் உள் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, அரசியல் உளவு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவரது நேர்மை, துணிச்சல் மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பில் உள்ள அனுபவம் இந்தப் பதவிக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. புதிய அரசின் கீழ் மாநிலத்தின் அமைதியை உறுதி செய்யும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஊனமுற்றவர்கள்..? இதுதான் நீங்க சொன்ன மாற்றமா.? தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share