ஊழலுக்கு "Zero Tolerance!"..! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார்.அப்போது, போதை என்ற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டுமே வெட்டி உள்ளோம் என்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை சமரசம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாலும் போதைப்பொருள் கலாச்சாரம் மரமாக வளர்ந்து நிற்கிறது என்றும் குறிப்பிட்டார்.
2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச்சன்பங்களை கூறி ஒதுங்கிச் செல்ல தனது மனம் இடம் தரவில்லை எனவும் குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என்ற ஒற்றை வார்த்தை கூறி தப்புவது பண்பு அல்ல என்றும் தெரிவித்தார். போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேறொன்று இருப்பதாக கூறியுள்ளார்.
இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டது தமிழக வெற்றி கழகம் என்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைத்து எம்எல்ஏக்கள் கவலை தெரிவித்திருப்பதாகவும் கூறினார். ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதை தங்கள் நோக்கம் எனவும் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!
காவல் மரணங்கள் என்பது சாதாரண நிகழ்வு அல்ல என்றும் காவல்துறையின் நம்பிக்கையை சிதைக்கும் நிகழ்வுகள் என்பதையும் முதல்வர் விஜய் தெரிவித்தார். மாற்றங்கள் இணையத்திலும் நடைபெறுவதால் அதனை தடுக்க நடவடிக்கை விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது அச்சம் ஏற்பட வேண்டும் என்றும் குற்றம் நடைபெறும் முன்பு தடுக்க வேண்டும் என்பதை அரசின் நோக்கம் எனவும் பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பேரவையில் அரசியல் புயல்..! முதல்வர் விஜய் பதிலுரை... கேள்வி நேரம் ரத்து..!!