"இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!
சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரை ஆற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்கா குறித்து முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிப்காட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் அதற்கு நேரடியாகப் பதிலளித்தார்.சிப்காட் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்பூங்காக்களை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அந்த வகையில் பெருந்துறை சிப்காட்டிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது தொகுதி உறுப்பினரும் உடன் இருந்ததாகவும் கூறினார். அங்கு நேரில் பார்த்த நிலைமை குறித்து பேசிய அவர், “பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.அந்த தொழிற்பூங்கா 1097.86 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது என்றும், ஆனால் இன்றுவரை அங்கு வெறும் நான்கு நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
32 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார். முதலீட்டாளர்களிடம் நேரடியாகக் கலந்துரையாடியபோது அவர்கள் பல குறைபாடுகளைக் குறிப்பிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தண்ணீர் வசதி இல்லாதது, சாலை வசதிகள் போதிய அளவில் இல்லாதது, தெருவிளக்குகள் இல்லாதது, பேருந்து வசதிகள் சரியாக இல்லாதது ஆகிய பிரச்சினைகளை அவர்கள் எழுப்பியதாகக் கூறினார். இதனால் சிப்காட்டிற்கு வருபவர்கள் கூட சரியான வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு லஞ்சம்.! வெங்கட்ரமணன் vs சக்கரபாணி... காரசார வாதம்.!!
என்றும் அவர் விளக்கினார்.இந்த ஆய்வுக்குப் பிறகு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். காவிரி நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கும் பணியைச் சோதனை முறையில் மேற்கொண்டு, குறைபாடுகளைச் சரிசெய்து, நிலம் ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதேபோல் தெருவிளக்குகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும், நீண்ட காலமாக டிடிசிபி அனுமதியின்றி இயங்கி வந்த பெப்சிகோ நிறுவனத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!