×
 

நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!

உடுமலை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் மீது, மது போதையில் இருந்த வாலிபர்கள் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின், சுமார் 5 மணி அளவில் பள்ளி வளாகத்துக்குள் நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர், அவர்களிடம் இது பள்ளி வளாகம், பாட்டில்களை உள்ளே வீசுவதால் மாணவர்கள் பாதிக்கின்றனர். பள்ளி வளாகத்துக்குள் மது அருந்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, 4 பேரும் அங்கிருந்து சென்றனர். பின்னர் மாலை, 6:00 மணிக்கு பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே, சையது முகமது குலாம் தஸ்தகீர், அமர்ந்திருந்தார். அப்போது, மது போதையில் வந்த அந்த 4 பேர், ஆசிரியரின் கை, கால்களை பிடித்து, கடுமையாக தாக்கியதோடு,அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி விட்டு ஓடித் தப்பிவிட்டனர்.

இதையும் படிங்க: போராடும் மாணவிகளை ஏன் அலைக்கழிக்கிறீங்க..? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!

ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் கண், வாய், மூக்கு ஆகியவற்றுக்குள் பெட்ரோல் பட்டதால், அவர் அலறி துடித்துள்ளார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுதொடர்பாக கணியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர். இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை. 

அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி  தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் முழு நேரமாக நடிக்கச் செல்லலாம். 

ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழா? சமஸ்கிருதமா? ட்விட்டரில் வெடித்த மோதல் மு.க.ஸ்டாலின் Vs அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share