ஆட்டிசம் பாதித்த சிறுவனை கொன்று புதைத்த விவகாரம்... மேலும் ஒருவர் கைது... தொடரும் விசாரணை
பொள்ளாச்சியில் மனநலம் பாதித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் மனநலம் பாதித்த இளைஞர் வருண் காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிறுவன் காணாமல் போனதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிறுவனை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக மனநல காப்பகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கிரிராம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பின்னர், மேற்பார்வையாளர் நிதீஷ் மற்றும் பணிப்பெண் ரங்கநாயகி போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!
இதனையடுத்து தோட்டத்திலிருந்து சிறுவனின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ஷாஜி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி மேலும் ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!