×
 

#BREAKING: புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன் ஜாமீன் ஒத்திவைப்பு… கேள்விகளால் துளைத்த நீதிமன்றம்…!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன் ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறி மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் எனவும் தெரிவித்து சிபிஐ விசாரணை கேட்ட அனைத்து பொது நலமான மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 

இந்த நிலையில், முன்ஜாமின் கூறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது. புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனுவை தள்ளி வைக்க போலீசார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, சொந்த கட்சி தொண்டர்களை கொலை செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. தாமதமாக வந்தது குற்றமா எனவும் கேட்கப்பட்டது. விஜயை பார்க்கக் கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் போலீஸ் மீது பழி போடவில்லை குற்றம்தான் சுமத்துகிறோம் என்று கூறப்பட்டது. வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும் என்றும் எங்குமே போலீசார் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் திமுக கூட்டத்தில் ஏதேனும் விபத்து நடந்தால் மாவட்ட செயலாளர், முதல்வர் மீது வழக்கு தொடரப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. கரூர் சம்பவம் விபத்து என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சார கூட்டத்தில் காலணிகள், ரசாயனம் வீசப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. எந்த எச்சரிக்கையும் இல்லாமல் லத்தி சார்ஜ் செய்து இருப்பதாகவும், இதனால் தான் நிலைமை மோசமானதாகவும் கூறப்பட்ட நிலையில், காவல்துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையும் படிங்க: கரூரில் தொங்கியபடி மக்களைக் காப்பாற்றிய தொண்டர்... வெளியாகும் அடுத்தடுத்த வீடியோ காட்சிகள்...!

பிரச்சார கூட்டத்திற்கு காலி ஆம்புலன்ஸ் வந்ததற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. கூட்டத்திற்கு அழைத்து அவர்களது உயிரை பறிப்போமா என்றும் அவர்கள் எங்களது மக்கள் எனவும் ஆனந்த் தரப்பில் உருக்கமாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஏற்பாட்டாளர்கள் அல்ல என்றும் மதியழகன் தான் ஏற்பாட்டாளர் எனவும் தெரிவிக்கப்பட்டன. நீங்கள் ஏற்பாட்டாளர் இல்லை என்றால் உங்களுக்கு பொறுப்பு இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்றும் நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என அறிவித்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. குடிநீர் தராததால் வலி எண்ணிக்கை அதிகமானதாகவும், எந்த வசதியும் இன்றி 8 மணி நேரம் நிற்க நாங்கள் அனுமதிக்கவில்லை என்றும் போலீசா தரப்பில் கூறப்பட்டது. சம்பவம் நடந்தவுடன் தமிழக வெற்றி கழகத்தினர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தனர். வாத, பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி ஜாமின் கோரிய மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்தார். இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளதால், மாலை இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு மனசுல வலியோ, காயமோ இல்ல.. வெறும் சினிமா டயலாக் தான்.. சீமான் விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share