போராடினால் சம்பளம் CUT... வேலைய விட்டே தூக்கிடுவோம்! தலைமைச் செயலாளர் பகிரங்க எச்சரிக்கை..!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வேலை நேரத்தை போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க...மகளிர் உரிமைத் தொகை ! அதிமுக்கிய அறிவிப்பு வெளியீடு...
நாளை நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டால் NO WORK - NO PAY என்ற அடிப்படையில் ஊதியப்படுத்தும் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், பகுதி நேர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாளை முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் துறைத் தலைவர்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டு, விதி மீறல்களை கண்காணிக்கவும், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அஜித் பிறப்புறுப்பில் கூட மிளகாய் பொடி... சித்திரவதை செய்து கொலை.... நீதிபதிகள் அதிர்ச்சி..!