×
 

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த தீவிர ஆலோசனை! அடுத்த சிக்சருக்கு ரெடியாகும் முதல்வர் விஜய்!!

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) அரசு, பெண்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்க தயாராகி வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி முதல் இந்தப் புதிய திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் த.வெ.க.,வின் முதன்மை வாக்குறுதியாக இருந்தது மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது தான். முதலமைச்சராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்ற உடனேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. இருப்பினும், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனடியாக முழுத் தொகையை வழங்க நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், மே மாதத்திற்கான உரிமைத் தொகை ரூ.1,000-ஆகவே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் உரிமைத் தொகையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க உத்தரவிட்டார். தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முழுமையாக மாற்றி, ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என்ற புதிய பெயரில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஜூன் 22 அன்று தொடங்கும் இந்தத் திட்டம் தமிழகப் பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் பொருளாதார சுயசார்பு, குடும்பச் செலவுகளுக்கு உதவி, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுடன் இணைத்து திட்டத்தை தொடங்குவது அரசியல் ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏராளமான பெண்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இந்தத் திட்டம் முழுமையாக அமலானால், லட்சக்கணக்கான தாய்மார்களின் வாழ்க்கை தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share