×
 

இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

பைக் சாகசம் செய்த இளைஞர் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில், லைக்குகள் மற்றும் வியூக்களை இலக்காகக் கொண்டு அந்த இளைஞர் தனது பைக்கில் ஆபத்தான சாகசங்கள் செய்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். வீடியோவில் அவர் பைக்கை தீவிரமாக சாய்த்து ஓட்டுவது, வேகத்தை அதிகரித்து ஆபத்தான முறையில் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு புகார் செய்தனர்.

உடனடியாக செயல்பட்ட போக்குவரத்து போலீசார், வீடியோவில் தெரிந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து இளைஞரை அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின்போது அந்த இளைஞர் தீபக் என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் உரிய முறையில் விளக்கம் கேட்டு, அவரது செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை விரிவாக எடுத்துரைத்தனர்.

சாலை விதிகளை மீறியதற்காக FIR பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு தனது தவறை உணர்ந்த அந்த இளைஞர், போலீசாரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். “நான் என் தவறை உணர்ந்துட்டேன்.. இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்” என்று கூறி, தனது செயலால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

போலீசாரின் இந்த அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கது. வெறும் அபராதம் அல்லது கைது மட்டும் செய்யாமல், இளைஞருக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவரே தனது தவறை ஒப்புக்கொள்ளும் வகையில் செயல்பட்டது இந்த சம்பவத்தின் சிறப்பம்சம். இத்தகைய சாகச வீடியோக்கள் இளைஞர்களிடையே லைக்குகளுக்காக பரவலாகிவரும் நிலையில், போலீசார் விரைவாக செயல்பட்டு முறையான எச்சரிக்கை வழங்கியது பலருக்கு பாடமாக அமைந்தது.

இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக்கூடாது..!! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு..!! காரணம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share