அமெரிக்காவை அழிக்க BIO WAR-ஐ கையிலெடுக்கும் சீனா? விவசாயத்தை அழித்து ஆண்களை மலடாக்க திட்டம்?
அமெரிக்காவிற்குள் அபாயகரமான பயோ வைரஸ் கிருமியை கடத்தியதாக மற்றுமொரு சீன ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர்
இதுகுறித்து சீன வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் கூறியதாவது: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, நெல் உள்ளிட்ட தானியங்களை அழிக்கும் தன்மை கொண்டது.
அதோடு கால்நடைகள், மனிதர்களுக்கும் பூஞ்சை பரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பூஞ்சையால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.
இதையும் படிங்க: நேபாள மக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா.. ட்ரம்ப் உத்தரவால் கதிகலங்கி நிற்கும் குடும்பங்கள்..!
கைது செய்யப்பட்ட யுன்கிங் ஜியான், ஜுன்யாங் லியூ ஆகியோர் சீனாவில் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையவர்கள். சீன அரசின் சதித் திட்டத்தின்படி இருவரும் அமெரிக்காவுக்குள் கொடிய பூஞ்சையை கடத்தி உள்ளனர்.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரப்பப்பட்டது. அடுத்த கட்டமாக பூஞ்சை தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவை குறிவைத்து அந்த நாடு செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்தவர் செங்சுவான் ஹான். இவர் வுஹானில் உள்ள ஹூவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் அமெரிக்காவிற்கு நோய் கிருமி கடத்தியதாக, டெட்ராய்ட் விமான நிலையத்தில் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து எப்.பி.ஐ., இயக்குனர் காஷ் படேல் கூறியதாவது: அமெரிக்காவிற்குள் உயிரியல் பொருட்களை கடத்தியதற்காகவும், அதிகாரிகளிடம் பொய் சொன்னதற்காகவும் சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நபர் சீன மக்கள் குடியரசின் குடிமகனும், சீனாவின் வுஹானில் முனைவர் பட்ட மாணவருமான செங்சுவான் ஹான் ஆவார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு முகவரியிடப்பட்ட வட்டப்புழுக்கள் தொடர்பான உயிரியல் பொருள் கொண்ட நான்கு பொட்டலங்களை ஹான் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ளார்.
டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்திற்கு வந்தவுடன், ஹான் கைது செய்யப்பட்டார். அவர் எப்.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையின் போது தவறை ஒப்புக்கொண்டார். நோய்க்கிருமி கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.
அமெரிக்க நிறுவனங்களுக்குள் ஊடுருவி, நமது உணவு விநியோகத்தை குறிவைத்து தாக்குதல் CCP தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது அமெரிக்க மக்களின் உயிருக்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு செயலாகும். இதனை தடுக்க எங்களின் எஃப்.பி.ஐ தொடர்ந்து அயராது உழைக்கும் எஃப்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட @FBIDetroit குழுவினருக்கும், @CBPக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நீதியின் மூலம் சரியான தீர்வு கிடைக்கும் என்றும் எஃப்.பி.ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நல்லதுக்கு இல்லை.. சுத்த பைத்தியக்காரத்தனம்! எலான் மஸ்கை எச்சரிக்கும் அமெரிக்க துணை அதிபர்..