×
 

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இருக்கா? இல்லையா? - தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு...!

தமிழகத்தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் இல்லை என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு

தமிழகத்தில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தாக்கம் இல்லை என பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தில், சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின், செயலாளர் திரு .சுந்தரராஜன் செய்தியாள்ரகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தல் குறிப்பாக நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஏற்கனவே சில இடங்களில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் மிகவும் சுகாதாரமாக, பயோ செக்யூரிட்டி முறையில் பராமரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் முட்டை ஏற்றுமதி தரக்கட்டுப்பாட்டிற்காக, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி குழுவினர் ஒவ்வொரு 21 நாளுக்கும் ஒரு முறை பண்ணைகளில் உள்ள கோழிகளில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்கின்றனர்.

இதையும் படிங்க: வெர்சி இன்னோவேஷன் அதிரடி..! பி.ஆர். ரமேஷ் புதிய தணிக்கை குழு தலைவராக நியமனம்!

தமிழகத்தல் ஒருசில இடங்களில் காகங்கள் உள்ளிட்ட பறவைகள் இறந்துள்ளது. அந்த நோய் கோழிகளைத் தாக்க வாய்ப்பில்லை. இதுவரை தமிழகத்தில் எந்த கோழிப்பண்ணையிலும் பறவைக்காய்ச்சல் வைரஸ் தாக்குதல் இல்லை.

மேலும், வழக்கமாக பண்ணைகளில் வெப்பம் காரனமாக சில கோழிகள் இறப்பது வழக்கம். கோடை காலங்களில் அதிக வெப்பத்தினால் பண்ணைகளில் கோழிகள் இறப்பு அதிகரிக்கும். இறந்த கோழிகளை சுகாதார முறைப்படி அப்புறப்படுத்திவிடுகிறோம் இந்த நிலையில் ராசிபுரம் அருகே ஒரு பண்ணையில் கோழிகள் வெப்பத்தால் இறந்துள்ளது.

பண்ணையில் கோழிகளுக்கான குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் கிடைக்காமல் கோழிகள் இறந்ததாக தெரிகிறது. அந்த பண்ணையை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். பறவைக்காய்ச்சலின் தாக்கம் எதுவும் இல்லை. இதுவரை எந்த நாட்டிலும், பறவைக்காய்ச்சல் நோய் மனிதர்களை தாக்கியதில்லை. எனவே பொதுமக்கள் யாரும் பறவைக்காய்ச்சல் நோயால் அச்சப்படத்தேவையில்லை.

நாமக்கல் பகுதியில் இருந்து வளைகுடாநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜம்போ விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share