பிள்ளையாரப்பா எந்த வம்பு தும்பும் வர கூடாதுயா! தேங்காய் உடைத்து வழிபட்ட புஸ்ஸி ஆனந்த்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசியலில் புதிய அலை எனக் கூறப்பட்ட விஜயின் சுற்றுப்பயணத்தை இந்த சம்பவம் முடக்கிப் போட்டது. கரூர் சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகிறது. இதுவரை விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு கரூருக்கு விஜய் செல்வது தொடர்பான திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.
கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் அக்டோபர் 29 ஆம் தேதி கூடியது. நவம்பர் ஐந்தாம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்தார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் சிபிஐ விசாரணை... கரூர் சம்பவத்துக்கு என்ன காரணம்? SSI நேரில் ஆஜர்...!
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விநாயகர் சிலைக்கு தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டார். கரூர் சம்பவம் கடுமையான தாக்கத்தை கட்சிக்கு அளித்த நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.
இதையும் படிங்க: 35 மீனவர்களையும் காப்பாத்துங்க... நிரந்தர தீர்வு காண தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்...!