×
 

BY ELECTION நடக்குமா..? நிலுவையில் வழக்குகள்..! இடைத் தேர்தலுக்கு தடை கோரி மனு..!!

இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தடை செய்யக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பல தொகுதிகள் காலியாகின. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்தனர். அவர்களில் மதுராந்தகம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சத்தியபாமாவும் அடங்குவர். இருவரும் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த இரு தொகுதிகளும் காலியாயின. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள பிற ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில், வழக்கு இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது.

வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.மனுதாரர் சுதன் தனது மனுவில், இந்த ராஜினாமாக்கள் அரசியல் காரணங்களுக்காகவே செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிந்த சிறிது காலத்திலேயே பதவியை விட்டுவிட்டு வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது தேர்தல் நடைமுறைகளையும் மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் என்றும், இது சட்டரீதியாகவும் நெறிமுறைப்படிலும் ஏற்புடையதல்ல என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்றும், அந்த இருவரின் வேட்புமனுக்களை ஏற்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இந்த இரு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் இதை எப்போது விசாரணைக்கு எடுக்கும் என்பதும், இடைக்காலத் தடை ஏதேனும் விதிக்குமா என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செயல்முறையும் நடைபெற்று வருகிறது. இந்த மனுவின் விளைவு இடைத்தேர்தல் அட்டவணையைப் பாதிக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share