யாருக்கு வெற்றி வாய்ப்பு.? விறுவிறு அரசியல் களம்... இடைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்.!!
மதுராந்தகம், தாராபுரம் , புதுவை தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுவை தட்டான்சாவடி தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியதுதமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுவை தட்டான்சாவடி தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்களை செப்டம்பர் 16ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மனு பரிசோதனை செப்டம்பர் 17ஆம் தேதியும், மனு திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 19ஆம் தேதியும் ஆகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும்.இந்த இடைத்தேர்தல்கள் ஏற்பட்டதற்கு பின்னணியில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்த அரசியல் மாற்றங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுகவின் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்.
தாராபுரம் தொகுதியில் அதிமுகவின் சத்தியபாமா வெற்றி பெற்றார். இருவரும் பின்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாகின. தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால் நீதிமன்ற வழக்குகள் காரணமாக மற்ற ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மட்டும் எந்த வழக்கும் இல்லாததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.பு
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசின் 100 நாள் கணக்கு! தவெக அமைச்சர்களுக்கு ஷாக்! 3 பேர் நீக்கம், ஒருவருக்கு இலாகா மாற்றம்?
துச்சேரியில் தட்டான்சாவடி தொகுதி காலியானது முதலமைச்சர் என். ரங்கசாமியின் ராஜினாமாவால் ஆகும். அவர் தட்டான்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மங்கலம் தொகுதியைத் தேர்ந்தெடுத்து தட்டான்சாவடியை விட்டுவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நடத்தை விதிகள் தொகுதி எல்லைக்குள் மட்டும் அமலில் உள்ளன.இந்த இடைத்தேர்தல்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இது முதல் பெரிய தேர்தல் சோதனையாக அமைந்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரை அந்தக் கட்சி மீண்டும் போட்டியிட வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தரப்பில் இந்த இரு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கட்சி சார்பில் விருப்ப மனுக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம்..! கொள்ளையடிக்கும் அவலம்... வேல்முருகன் காட்டம்..!!