அப்பளம் போல் நொறுங்கிய நீதிபதியின் கார்.. 4 உயிர்கள் பறிபோன சோகம்!!
தஞ்சை அருகே நீதிபதியின் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சையை சேர்ந்த நீதிபதி ஒருவர் தனது காரில் கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரது காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. நீதிபதி திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் நீதிபதியின் பாதுகாவலர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் நீதிபதி உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்ததும் அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் கொரோனா.. 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. மக்களே உஷார்..!
காரம் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. அஜாக்கிரதையால் பறிப்போன உயிர்கள்..!