சாதியப் பெயர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்பு... உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு...!
சாதியப் பெயர்கள் நீக்கம் குறித்த தமிழக அரசின் முடிவை ஆய்வுக்கு உட்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு, தனது சமூக நீதி அரசியலின் முன்னோடியாக இருந்தாலும், சாதி அடையாளங்கள் இன்னும் சமூகத்தின் நிழலாகத் திகழ்கின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சாதி சார்ந்த பெயர்களைத் தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் என்பவற்றிலிருந்து நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது வெறும் பெயர் மாற்றமல்ல. சமூகத்தில் சாதியின் பிணைப்புகளை அறுத்து, சமத்துவத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படி. ஏப்ரல் 29 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த இந்த உத்தரவு, தமிழகத்தின் சமூக மாற்றப் போராட்டத்தின் தொடர்ச்சி. இந்த சாதிப்பெயர் நீக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றாலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள தான் செய்கிறது.
இதனிடையே சாதிப் பெயர்களை நீக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் நீர்நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கம்... தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு திருமா உற்சாகம் வரவேற்பு...!
இந்த நிலையில், சாலை மற்றும் தெருக்களின் பெயரில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சாலை, தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாதிய பெயரை நீக்கும் அரசின் முடிவு தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கரூர் சம்பவம்... மதுரை கிளையில் மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்...!