#BREAKING: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..! 2வது நாளாக துருவித் துருவி விசாரணை..!
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரண்டாவது நாளாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: மது விற்பனையில் அசுர வளர்ச்சி… கஜானாவில் பொங்கிய போதை..! வெளுத்து வாங்கிய TVK அருண் ராஜ்..!
அதன்படி கடந்த 12 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் என்பதற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் ஆஜராகி உள்ளார். விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர். இந்த விசாரணைகளில் விஜய் அளிக்கும் பதில்களை பொறுத்து குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம் பெறுமா என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..? புரசை V.S. பாபு தவெகவில் ஐக்கியம்... அதிமுகவில் மா. செ. பதவி பறிப்பால் அதிருப்தி என தகவல்..!