இந்த முறை இரட்டை இலை சின்னம் இருக்காது... அவிநாசியில் அதிமுக வாக்காளர்களிடம் சிக்கித் தவித்த எல்.முருகன்...!
இரட்டை இலை தான் தாமரை, தாமரை தான் இரட்டை இலை எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.முருகன்
இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் இருக்காது... அதற்கு பதிலாக தாமரை சின்னம் தான் இருக்கும் ஏனென்றால், இரட்டை இலை தான் தாமரை,
தாமரை தான் இரட்டை இலை என்று கூறியும், தெலுங்கில் பேசியும், பாஜக வேட்பாளரான எல்.முருகன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி (தனி) யில் பாஜக வேட்பாளரான ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இன்று மாலை அவிநாசியை அடுத்த வடுகபாளையம், புஞ்சைதாமரைகுளம், போத்தம்பாளைம், புலிப்பார் மற்றும் தத்தனூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பில் நின்றவாறு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ஒரு சில ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அவர் தெலுங்கில் பேசியவாறு வாக்கு சேகரித்தார். அவருக்கு பிரச்சார பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்தும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: எடப்பாடியாரின் கடந்த ஆட்சியில் அவரது முழு முயற்சியால் கொண்டு வரப்பட்டது அவிநாசி அத்திக்கடவு திட்டம்.அதனால் இப்பகுதிகளில் விவசாயம் செழித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இரண்டாவது திட்டமாக செயல்படுததப்படும்.
எடப்பாடியாரின் கடந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றது.விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஆறாயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் மோடி அளித்துவருகிறார் விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்துள்ளோம்.
108 - க்கு அழைத்தால் மருத்துவ சேவைக்கு உடனடியாக வருவது போல கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வரும் விவசாயிகளுக்கு உதவியாக 1962 -க்கு அழைத்தால் நம் வீடு தேடி நடமாடும் கால்நடை மருத்துவமனை வந்து சேவைசெய்யும் திட்டத்தை கடந்த முறை நான் கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆறுநூறு கோடி ரூபாய் மதிப்பில் மோடி நிறைவேற்றியுள்ளேன்.
மேலும், உங்கள் பகுதிகளில் தேவைப்படும் அனைத்து கோரிக்கைகளும் நான் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றித் தருவோம். எனவே, எடப்பாடியார் மற்றும் மோடி ஆதரவு பெற்ற எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசி பெற்ற சின்னமாம் தாமைரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.
இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் இருக்காது. அதற்கு பதிலாக தாமரை சின்னம் தான் இருக்கும் ஏனென்றால், இரட்டை இலை தான் தாமரை,
தாமரை தான் இரட்டை இலை என்று கூறினார். ஏனெனில் கடந்த முறை எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது எந்த சின்னத்திற்கு வாக்களிப்பீர்கள் என பொதுமக்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் இரட்டை இலை சின்னம் எனக்கூறியிருந்தனர். அதனால் இந்த முறை புதுவிதமான விளக்கத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், ஒரு சில ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அவர்களது பேச்சு வழக்கான தெலுங்கு மொழியில் தனது சமுதாய பிரிவை சொல்லி அவர்களது சமுதாய பிரிவையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, உங்களது மகன், அண்ணன் மற்றும் தம்பி ஆகியோரிடமும் சொல்லி தாமரை சினனத்திற்கு வாக்களியுங்கள் என்று அவர் பேசினார்.
இதையும் படிங்க: குப்பை அள்ளுவதில் கூட ஊழல்..! கையாலாகாத திமுக அரசு... முதல்வரை வெளுத்த அண்ணாமலை..!
இதையும் படிங்க: அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!