மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு சதி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் சேர்ந்து மத்திய அரசு சதி செய்கிறது எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் கூட்டுச் சேர்ந்து மத்திய அரசு சதி செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் ஒப்புதலைக் கர்நாடகா பெறத் தேவையில்லை என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காரசாரமான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் உண்மைக்கு மாறான மற்றும் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாகச் சாடியுள்ளார்.
அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் வாதம் முற்றிலும் தவறானது என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கீழ்நிலைப் பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசும் கர்நாடக அரசும் இணைந்துச் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் பதில்!
தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் இந்தத் தவறான நிலப்பாட்டைத் தட்டிக்கேட்கவும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் கர்நாடகா செல்கிறாரா?" - உறுதியான தகவல் இல்லை... பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு பேட்டி!