#BREAKING பல கோடி சுருட்டிய வழக்கில் - அதிமுக நிர்வாகி கைது.. அமமுக நிர்வாகிக்கு வலைவீச்சு..!
ராசிபுரம் நகர அஇஅதிமுக செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏ.கே. சமுத்திரம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு ராயல் ஹை டெக் சிட்டி என்ற பெயரில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் மாதாந்திர தவனை முறையில் பணம் வசூல் செய்யப்பட்டு தற்போது வரை வீட்டு மனை பத்திரவு பதிவு செய்து தராமல் மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நாமக்கல் மாவட்ட அமமுக செயலாளர் ஏ.பி.பழனிவேல் மற்றும் ராசிபுரம் அஇஅதிமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான பாலசுப்ரமணியன் ஆகிய இரண்டு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பாலசுப்ரமணியனை கைது செய்த போலீசார் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அமமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் ஏ.பி பழனிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!
இதையும் படிங்க: மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!