#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை...! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தின் வாழ்வாதாரமாகத் திகழும் செம்பரம்பாக்கம் ஏரி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கட்டமைப்பு. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது.
கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 24 அடி ஆழம் கொண்டது. மொத்த நீர் சேமிப்பு திறன் சுமார் 103 TMC. ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21 அடியை எட்டியது. இதன் காரணமாக இன்று மாலை 4 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி... நீர் திறப்பு? முக்கிய அப்டேட்..!
எனவே சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: முடியலப்பா...மிரட்டும் மழை... வீடுகளை காலி செய்யும் முடிச்சூர் மக்கள்...!