மரண அடி.. பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தது இந்தியா.. பாக்லிஹார் அணை நீர் நிறுத்தம்..!
செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக செல்லும் தண்ணீரை இந்தியா நிறுத்தியுள்ளது.மேலும், ஜீலம் நதி நீரை வெளியேற்றுவதை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலத்த கண்டனத்தை தெரிவித்து உள்ளன. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதையும் படிங்க: குறி வச்சா இரை விழும்! ரஷ்யா ஏவுகணையுடன் களமிறங்கிய இந்தியா.. வேட்டை ஆயுதத்தால் குலைநடுங்கும் பாக்.!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். 80 சதவீத விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் பாகிஸ்தான் அலற தொடங்கியது.
இந்தியாவின் இந்த மரண அடியால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான் அடாவடியாக பேசி வருகிறது. சிந்து நதி நீர் நிறுத்தப்படால் அதை போராகவே கருதுவோம் என்று தெரிவித்திருந்தது. இதற்கெல்லாம் சிறுதும் அஞ்சாத இந்தியா தற்போது பாகிஸ்தானின் முதுகெலும்பை முறிக்கும் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. திபெத் மற்றும் இமய மலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் 6 நதிகள், சிந்து நதி தொகுப்பில் இருக்கிறது. இந்த நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்கின்றன.
கடந்த 1960ல், உலக வங்கியின் முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிறது.
இமயமலை பகுதியில், ஹிமாச்சல் மாநிலத்தில் உருவாகும் செனாப் நதி, ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு பாய்கிறது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள அங்கு, அணையின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டன.இதுபோல, ஜீலம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிஷண்கங்கா அணையின் ஷட்டர்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாக்லிஹார் அணையில் நீர் நிறுத்தப்பட்டால், அது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது. இது தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கான நீரை எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும் என்பதை உணர்த்துவதாக அமையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 4 நாள்தான் தாக்குபிடிக்குமாம்..! போர் ஏற்பட்டால் பாக். நிலை பரிதாபம்தான்..! என்ன காரணம் தெரியுமா?