×
 

சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

சென்னையில் சொத்து வரி மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையில் சொத்து வரி மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழக அரசு 2022 மார்ச் 30-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 53 (G.O.Ms.No.53) அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், குடியிருப்புகளின் பரப்பளவுக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றப்பட்டன. 600 சதுர அடிக்குள், 601–1,200, 1,201–1,800 மற்றும் 1,801 சதுர அடிக்கு மேல் எனப் பிரிக்கப்பட்டு விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் ஆவணங்களின்படி, 2022-23 முதல் இந்தச் சீராய்வு நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில் பல ஆண்டுகளாக சொத்து வரி சீராய்வு செய்யப்படவில்லை என்றும் மாநகராட்சி தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

அதன்பிறகு, தற்போது சில சொத்துகளுக்கு மீண்டும் அதிகமான வரி வந்திருப்பது குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மாநகராட்சியின் சொத்து வரி பதிவுகளிலும் 2022-23 முதல் மாற்றப்பட்ட தொகைகள் காணப்படுகின்றன.

தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்காமல், முறையான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நான்கு மடங்கு சொத்து வரியை உயர்த்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

இதுவரை ரூ.5,000 சொத்து வரி கட்டியவர்களுக்கு தற்போது ரூ.28,000 வரை சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து, தற்போது சொத்து வரி உயர்வும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் ஒன்றாக உள்ளது.

ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது சொத்து வரி உயர்வும் பொதுமக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா கைவிட்டுச் சென்ற திட்டம்! வேகம் காட்டும் முதல்வர் விஜய்?! பரபரக்கும் பட்டினப்பாக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share